Tuesday, February 17, 2009

சிரிச்சி வைங்கோ

  • என்னா மச்சான்? நேத்து சுரேஷ் வீட்ட பெருங்கூச்சல்? என்னாச்சு?
தல எழுத்துடா. அவன் பொண்டாட்டி விரதமாம். இவரு போய் வழிய அந்தம்மா இறையாண்மைக்கு இழுக்குன்னு கிழிச்சி ஒட்டிச்சாம். ஓன்னு அழுறான்.

  • தீவிர வாதத்தை அடக்க ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். சோ பேச்சு.
இலங்கை விலைக்கு வருதா? இல்ல கன்சல்டன்சி ஆரம்பிச்சிட்டங்களா. பாகிஸ்தான் போறாங்களா கேட்டு சொல்லுங்க சாமிகளா. ஒபாமாவ கேட்டு பார்க்கலாம்.

  • ஏண்டா. இந்த விடுதைலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும்னு எல்லாரும் சொல்றாங்க. ராணுவத்த ஏன் சொல்லுறதில்ல?
அட வெண்ண. அவன் யாரும் கேக்க இடம் வைக்காம போட்டுண்டு தானே இருக்கான். அப்புறம் என்னடா அவன சொல்றது.

  • காங்கிரசை சீண்டி பார்த்தால் நடப்பது வேறு! தங்க பாலு எச்சரிக்கை.
அப்பிடி போடு. சத்திய மூர்த்தி பவன்ல போடாத சண்டையா. எத்தன வேட்டி. எத்தன அண்டர்வேர். ஈழ பிரச்சினை வந்தாலும் வந்திச்சி. இப்போ போய் போஸ்டுக்கு சண்ட எதுக்குன்னு விட்டு வெச்சா சண்டை மறந்து போய் இருக்கும்னு நினைச்சிட்டாங்க போல. சின்னப்புள்ள தனமால்ல இருக்கு?

6 comments:

S.R.Rajasekaran said...

\\காங்கிரசை சீண்டி பார்த்தால் நடப்பது வேறு! தங்க பாலு எச்சரிக்கை\\


மண்டைல மசுருதான் இல்லன்னு பாத்தா இருக்க வேண்டியதும் இல்லன்னுதான் நினைக்க வேண்டி இருக்கு .இவருக்கு சொந்தமா அறிக்கை கொடுக்க தெரியாது ஒருதடவை மனப்பாடம் பன்ன அறிக்கைய யோசிச்சி யோசிச்சி சொல்லுவாரு அதனால் பாவம் இவர விட்டுருங்க

S.R.Rajasekaran said...

\\ராணுவத்த ஏன் சொல்லுறதில்ல?\\


விடுதலை புலிகளை சொன்னால் அவங்கள்ள பதில் சொல்றதுக்கு ஆள் இல்லை .ரானுவதுக்கிட்ட சொன்னா ராஜபக்சே ஏண்டா நான் காசுகொடுத்து வாங்கி சுடுறேன் உனக்கென்னடா புடிங்கி பொத்திக்கிட்டு போடான்னு சொல்லுவார் .அப்புறம் பொத்திக்கிட்டு தான் போகணும் வாயை !

S.R.Rajasekaran said...

\\தீவிர வாதத்தை அடக்க ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். சோ பேச்சு.\\\


இந்த ஆளுக்கு வயசு ஆனாலும் நைய்யாண்டி மட்டும் போகாது .இத என்னமோ உண்மைன்னு நம்பிக்கிட்டு நம்ம ஆளுங்க உணர்ச்சி வசப்படிருவாங்க .ஒரு உண்மைய சொல்றேன் ,சதாம் உசேனும் வைக்கோவும் சேந்துதான் இலங்கை ராணுவத்தை தூண்டிவிட்டு சண்டைபோட வைக்கிறாங்க இதுவும் சோ என்கிட்டே சொன்னது

vasu balaji said...

நீங்க வேற. இந்தாளு நடிக்கறப்போல்லாம் எல்லா படத்திலையும் அரை லூசு தான். இப்போ முத்திப்போச்சு போல. அம்மாவ விட்டா ஆளில்லன்னு அலட்டுறது. அம்மா ஆட்சிய புடிச்ச அடுத்த நாள்ள இருந்தே அய்யாவால தான் முடியும்னு அடுத்த எலக்சன் வரைக்கும் கூவறது. இத்தன பேர இத்தன வருசமா முட்டாளாக்கிண்டிருக்கேன்னு சிரிப்பாங போல. பாவங்க வை.கோ. அப்பப்போ அம்மா கிட்ட சாரி சொல்றாங்களா தெரியாது. ஆன கொஞ்சமாவது சவுன்ட் விடுறாங்க. அதனால ஒரு வேளை ஹிட்லரயும் சதாமையும் சொல்லி இருக்கலாம்.

Anonymous said...

சிரிப்பு வரல, படிச்சவுடனே கடுப்புதான் வருது....
இந்த லட்சணத்துல எழுதிட்டு "சிரிச்சு வைங்கோ" னு தலைப்பு வேறு....

சக்(ங்)கடத்தார் said...

ஏண்டா. இந்த விடுதைலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும்னு எல்லாரும் சொல்றாங்க. ராணுவத்த ஏன் சொல்லுறதில்ல?
அட வெண்ண. அவன் யாரும் கேக்க இடம் வைக்காம போட்டுண்டு தானே இருக்கான். அப்புறம் என்னடா அவன சொல்றது.//


அப்பு ராசா கையைக் குடும்???