Tuesday, February 17, 2009

பத்திரிகை (அ) தர்மம்

இந்த பத்திரிகை தர்மம்னு ஒரு வார்த்த இருந்திச்சிங்க தமிழ்ல. அத ரொம்ப நாளா காணல்லை. யாராவது கண்டா சொல்லுங்கோ.
இந்த வாத்திமார்கள சொல்லணும். பாடம் படிக்கிறதே பெரும்போக்கா இருக்கைல, பத்திரிகை படிடா. அறிவு வளரும்னு பிராணன எடுத்தாங்க. அப்போவே கேக்கணும்னு வந்திச்சி. அப்போ பாடம் படிக்கிறது எதுக்குன்னு. இப்போ மாதிரி சட்டமெல்லாம் வராத காலமாச்சா. வயசு பாராம டவுசர களத்தி வெயில்ல நிக்க வெச்சிடுவாங்க. கொசுறா பிரம்பு முறிய அடி விழும். (பிரம்பு வேற அடுத்த நாள் வாங்கி கொண்டு வரணும். அதுக்கு தனியா அடி பின்னூட்டம்). இந்த எளவெல்லாம் எதுக்குன்னு பத்திரிகை படிக்கிற கெட்ட பழக்கத்துக்கு ஆளாயிட்டோம். காலைல வந்த பேப்பரை படிக்க நேரமில்லாம ஆபீசுல படிக்கலாம்னு கொண்டு போய் அங்க நைஞ்சு நூலாகி ராத்திரி தூங்க போகைல புரட்டலைன்னா தூக்கம் வராது சில பேருக்கு. சிலருக்கு காஃபி சாப்டு கக்கத்துல இடுக்கிண்டு கக்கூசில போய் படிச்சாதான். அதென்னாங்கடா கனெக்ஷன்னு புடி படவே இல்ல. அப்புறம் ஒரு ஊகமா செரி. இவங்க பூஞ்சை மனசு போல. பத்திரிகைல வர வெட்டு குத்து அடி தடி இதெல்லாம் பார்த்தா இந்த வரூஊஊஊஊஉம் ஆனாஆஆஆஆஆஅ வராஆஆஆஆஆஆஆது கேஸ்ங்களுக்கு பெரீய ரிலிஃப்னு முடிவு. இப்போல்லாம் ராத்திரி விடிய விடிய நெட்ல நியூஸ் பார்க்குறமா. காலைல பேப்பர் பார்த்தா ஏதே பழைய பேப்பர் பார்த்த ஃபீலிங். வேற என்னங்க. திரும்ப திரும்ப ஒரே நியூஸ். சாம்பிளுக்கு கொஞ்சம்

  • மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம். நேத்து தானடா படிச்சோம். இன்னைக்கு என்னான்னு பார்த்தா அது சீமானுக்கு. இன்னைக்கு திருமாவுக்காம்.
  • ஆட்சியைக் கவிழ்க்க சதி. ஐயோ இதுவும் நேத்து வந்திச்சேன்னு பார்த்தா அதுகருணாநிதி அய்யா. இது ஸ்டாலின்
இதென்னாங்கடா. வலைமனை பத்திரிகைள்ள படம் போட்டு கொத்து கொத்தா இத்தனை பேரு சாவுன்னு வந்திச்சே. இதைக் காணோமேனு யார போய் கேக்க. ப்ரிட்டானியா ஆள அனுப்பறாங்களாம். ஒபாமா யோசிக்கறாங்களாம். பிரான்சில ஊர்வலமாம். சுவிஸ்ஸில உண்ணாவிரதமாம். இதெல்லாமும் காணோமேன்னு திகைப்பா இருக்கு. அப்புறம் அட விதேசி மோகம் நல்லதில்லை. நம்ம ஊர்லயே எவ்ளோ விஷயமிருக்க இதுக்கெல்லாம் ஆளம்புன்னு செலவு மிச்சம்னு விடுறாங்க போலன்னு ஒரு சமாதானம். சில பத்திரிகை இருக்கே சிலுமிஷம் தாளலை. அதிலையும் காலை மாலைன்னு ஒரே பத்திரிகைல மாலை பத்திரிகை எதிர் கட்சின்னா காலை பத்திரிகை ஆளும் கட்சி. இதில்லாம கட்சி சார்பு பத்திரிகை. இது கொஞ்சம் தேவலாம் ரகம். ஏன்னா இதில க‌ட்சி கூட்டம். தலைவர் பேச்சுன்னு ஒரு மாதிரியா போயிடும்.

சில பத்திரிகை இருக்கு. ஆளும் கட்சி கடும் கண்டனம்னு நியூஸ் இருந்தா ஒரு ஓரமா சிங்கள ராணுவம் வெறியாட்டம். ஒன்னுக்கிருந்த ஒரு ஆள் உட்பட ஒரு ஓணான், ஒரு நாய், ஒரு பசு படுகொலைன்னு வரும். அடுத்த நாளே பேச்சு வார்த்தைக்கு உடன் பட வேண்டுமென அறிகைன்னு வர ராமேஸ்வரத்தில் ஒரு கட்டை கரை சேர்ந்தது. கரும்புலிகள் ஊடுருவலான்னு ஒரு கேள்வி. இல்லாட்டி இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சி. புலியா? இவரை சோதனையிட்டதில் காது இடுக்கில பாதி எரிஞ்ச பீடி துண்டொன்னு, கோவணத்துக்குள்ள செல் போனு, பிசிலெரி பாட்டில்ல மண்ணெண்ணை போன்ற பயங்கர ஆயுதங்கள் கை பற்றி இருப்பாங்க.

செத்துட்டாங்கன்னு ஃபோடோ போட கொண்டு போனா எரிச்ச அல்லது புதைச்ச அத்தாட்சி கேக்குற பத்திரிகை கூட தேவைன்னா ஊகமா செய்தி போடும். உருப்படியா என்ன நடக்குது. ஏன் நடக்குது. சொல்லவே மாட்டாங்க. மவனே. ரென்டு பத்திரிகை வாங்கி என்னதான் சொன்னாங்கன்னு பார்க்கலாம்னா இவன் போட்டதுக்கு நேர்மாறா இருக்கும். இந்தக் கருத்துக்கணிப்புன்னு ஒரு கூத்து. இதோட அர்த்தமே மக்களோட மன நிலை என்னன்னு ஆட்சியாளர்களுக்கோ பொறுப்பானவங்களுக்கோ உதவியா இருக்குமேன்னு தான். இப்போ இது பெட்டிங்கு உதவும். இல்லன்னா நமீதாவா நயன்தாராவா...இதுக்கு ஒரு கணிப்பு. இது போக அடிச்சிகிட்டு சாவ வழி தேடுற செய்திகள். எங்கெங்க என்னென்ன வில்லங்கமா நடக்குது..விலாவரியா போடோ அட்ரஸ் எல்லாம் போடுவாங்க.

கொடுமை தெரியுமாங்க. ஒரு நாள் வாத்திய கடைவீதில பார்த்தன். எல்லா எரிச்சலும் சேர்த்து வெச்சி போய் கேட்டன். அய்யா பத்திரிகை படி அறிவு வளரும்னு அப்பிடி ஒரு அடி அடிச்சி இந்த கெட்ட பழக்கத்த விடவும் மாட்டாம இந்த எழவெல்லாம் சகிக்கவும் மாட்டாம என்ன ஒரு பிழைப்பு இதுன்னு. வில்லங்கம் புடிச்ச பெருசு சொல்லிச்சி. இப்பல்லாடா தெரியுது. படிச்சிருந்தா அறிவு வளர்ந்திருக்கும். அறிவு வளர்ந்திருந்தா பேப்பர் படிப்பியாடா? இவ்வளவு வயாசாச்சி ச எதுக்குடா பூமிக்கு பாரமாவாம்.



No comments: